உள்ளூர் செய்திகள்
சென்னிமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி
நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னிமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
சென்னிமலை:
நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னிமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் கணக்கெடுப்பது வழக்கம்.
அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த பணி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி சென்னி மலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர் ரோடு, வெள்ளோடு ரோடு, ஊத்துக்குளி ரோடு, மற்றும் கொடுமணல் ரோடு ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த 12 பணியாளர்கள் இரவு, பகலாக கடந்த 5 நாட்களாக வாகனங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாலைகளில் செல்லும் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகன ங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர். சென்னிமலை - காங்கேயம் செல்லும் மெயின் ரோட்டில் மட்டும் 15 நிமிடத்தில் சுமார் 600 வாகனங்கள் சாலையில் செல்வதாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.
சென்னிமலையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.