உள்ளூர் செய்திகள்
சட்டையப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
நாகை சட்டையப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை சட்டையப்பர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 4 ம் தேதி தொடங்கியது. நேற்றைய தினம் ரிஷப வாகனத்தில் சட்டையப்பர் வீதியுலா நடந்து முடிந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். நான்கு மாட வீதிகள் வழியாக வந்த தேரினை ஆரூரா தியாகேசா என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்து வந்தனர்.