உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வாலிபரிடம் பணம்-செல்போன் பறித்த 3 பேர் கொண்ட கும்பல்

Published On 2022-05-13 15:19 IST   |   Update On 2022-05-13 15:19:00 IST
3 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் திடீரென மணி பர்சை கீழே தள்ளி அவரது பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.700, செல்போன் மற்றும் 2 ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.
ஈரோடு:

பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி அன்புநகர், ஓலப்பாளையம் வீதியை சேர்ந்தவர் மணீஸ் (33). இவர் திருப்பூரில் உள்ள கார்மெண்ட்ஸ்சில்  பணியாற்றி வருகின்றார். 

சம்பவத்தன்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பெத்தாம்பாளையம் பிரிவில் இருந்து சிலேட்டர் புறம் செல்வதற்காக சர்வீஸ் சாலையில் தனது  மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அரசு பாலிடெக்னிக் அருகே சென்ற கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த  3 பேர் கொண்ட  வழிப்பறி கும்பல் திடீரென மணீசை கீழே தள்ளி  அவரது பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.700, செல்போன் மற்றும் 2 ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.

இது குறித்து மணீஸ் பெருந்துறை போலீசில் புகார்  செய்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Similar News