உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை பொது விநியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2022-05-13 14:55 IST   |   Update On 2022-05-13 14:55:00 IST
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து தாலுகாவிலும் நடக்கிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து தாலுகாவிலும் தலா ஒரு இடத்தில் நடக்கிறது.

இக்கூட்டத்தில் புதிய ரேஷன் கார்டு பெற மனு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்றவைகளுக்கு மனு வழங்கலாம். 

அதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை  திருவேங்கடம்பாளையம் புதூர் கடை, மொடக்குறிச்சி   கரும்பாறை  முள்ளாம்பரப்பு கடை, கொடுமுடி வேலாயுதம்பா ளையம் கடை, கோபி  பாஸ்கரா 2 கடை, நம்பியூர்   குருமந்துார் கடை, பவானி  மைலம்பாடி கடை, அந்தியூர்   பட்லூர் நான்கு ரோடு கடை, தாளவாடி  கரளவாடி கடையில் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

Similar News