உள்ளூர் செய்திகள்
கோப்பையுடன் வெற்றி பெற்ற வீரர்கள்.

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வேதாரண்யம் அணி வெற்றி

Published On 2022-05-13 14:52 IST   |   Update On 2022-05-13 14:52:00 IST
நாலுவேதபதி கின்னஸ் பார்க் மைதானத்தில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட்: போட்டியில் வேதாரண்யம் அணி வெற்றி பெற்றது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே நாலுவேதபதி கின்னஸ் பார்க் மைதானத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 

இதில் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 24 அணிகளின் வீரர்களுடன் வேதாரண்யம் அணியினரும் கலந்துகொண்டு விளையா டினர்.போட்டியில் முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை வேதாரண்யம் பீனிக்ஸ் அணி பெற்றது. 

இரண்டாம் இடத்தை ரூ.30 ஆயிரம் நாகை அணியும், மூன்றாம் இடத்தை ரூ.20 ஆயிரம் கீழ்வேளூர் அணியும் பெற்றது. வெற்றிபெற்ற வேதாரண்யம் அணிக்கு என்.வி.ஆர் சுழல் கோப்பையை கராத்தே வீரர் வினோத் பீனிக்ஸ் அணிக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டர் வாசுதேவன் தலைமையிலான பயிற்சி மாணவர்கள் செய்திருந்தனர்.

Similar News