உள்ளூர் செய்திகள்
பனங்குடி கிராமத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் தாங்கினார்.
தாசில்தார் அமுதா, தனி தாசில்தார் முத்து முருகேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் பனங்குடி கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வரும் 17 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 8 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், இலவச தையல் இயந்திரம் என சுமார் ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்து 868 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மண்டல துணை தாசில்தார் யசோதா, திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.