உள்ளூர் செய்திகள்
முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

ரூ.2.13 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்

Published On 2022-05-13 14:48 IST   |   Update On 2022-05-13 14:48:00 IST
வேதாரண்யம் அருகே ரூ.2.13 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை ஊராட்சியில் அரசின் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது. கோட்டாட்சியர் துரைமுருகன் வரவேற்றார். 

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. ஷகிலா, ஊராட்சி தலைவர் கஸ்தூரி, மாவட்ட கவுன்சிலர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கலந்துகொண்ட 326 பயனாளிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், தையல் எந்திரம், தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பிலான இடுபொருட்கள் உட்பட அரசின் நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பேசினார்.
 
முன்னதாக அரசு சார்பில் மருத்துவம், விவசாயம், கல்வி உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்ப ட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டர். 

நிகழ்ச்சியில் வேதார ண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, ஒன்றிய ஆணையர் அண்ணாதுரை, தோட்டகலைத்துறை இணை இயக்குநர் திவ்யா, அலுவலர்கள் சிவராமகிருஷ்ணன், வைரமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர்ராஜன், டி.எஸ்.பி. முருகவேல் அரசு அதிகாரிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டனர். 
தாசில்தார் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Similar News