உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கார் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2022-05-13 09:18 GMT   |   Update On 2022-05-13 09:18 GMT
வேகமாக வந்த கார் மொபட் மீது மோதி கல்லூரி மாணவர் பலி.
கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் கல்வெட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் மனோஜ்குமார் (21). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

சம்பவத்தன்று மனோஜ்குமார் கல்லூரி முடிந்து தனது நண்பர் ஸ்ரீதர் என்ற மாணவருடன் மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.

ஸ்ரீதர் வண்டியை ஓட்டி வந்துள்ளர்.மனோஜ்குமார் பின்னால் அமர்ந்து வந்து உள்ளார். 

இருவரும் ஈரோடு கரூர் ரோட்டில் கணபதி–பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே வரும்போது அதே ரோட்டில் பின்னால் வேகமாக வந்த கார் மொபட் மீது மோதியது.

இதில் ஸ்ரீதர், மனோஜ்குமார் இருவரும் கீழே விழுந்தனர். மனோஜ்குமார் பின்தலையில், முகத்தில் பலத்த அடிபட்டும் மூக்கிலும், காதிலும் ரத்தம் வந்தது.

ஸ்ரீதருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.  அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து உள்ளார்கள். 

அங்கு மனோஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். ஸ்ரீதர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
 
தகவல் அறிந்து சென்ற மலையம்பாளையம் போலீசார் மனோஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

மேலும் காரை ஓட்டி வந்து மோதி விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற கொளாநல்லியை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் தனசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News