உள்ளூர் செய்திகள்
தே.மு.தி.க.ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் :
அரியலூர் செந்துறை சாலையிலுள்ள தே.மு.தி.க மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
வரும் 25-ந் தேதி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை சிறப்பான வரவேற்பு அளிப்பது, மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க வை மாபெரும் சக்தியாக உருவெடுக்க கட்சியினர் அர்ப்பணிப்போடு பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழிற் சங்கச் செயலர் பாண்டியன், மாவட்ட தொண்டரணி துணைச் செயலர் ராமசந்திரன், மாவட்ட மாணவரணி துணைச் செயலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒன்றியச் செயலர் மணிகண்டன் வரவேற்றார். முடிவில் கேப்டன் மன்ற ஒன்றியச் செயலர் பாலு கூறினார்.