உள்ளூர் செய்திகள்
file photo

கந்தர்வகோட்டையில் டெங்கு காய்ச்சலால் அறிகுறியுடன் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published On 2022-05-12 10:04 GMT   |   Update On 2022-05-12 10:04 GMT
கந்தர்வகோட்டையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இயங்கி வரும் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் பணிபுரியும் 4 நபர்களுக்கும்,  

அருகில் உள்ள தீயணைப்பு துறை நிலைய காவலர் ஒருவருக்கும்டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் வேளாண்மை விரிவாக்க அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள யாதவர் தெருவில் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்மணிமாறன் தலைமையில்மே 

ற்பார்வையாளர்கள் முத்துக்குமார், நல்லகண்ணு, திருநாவுக்கரசு, பழனிசாமி மற்றும்உதவியாளர்கள் அரசு அலுவலகங்களிலும் மற்றும்

அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வுகள் செய்து கிருமி நாசினி மற்றும் கொசு மருந்து அடித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News