உள்ளூர் செய்திகள்
சிறுமி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
சிறுமி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர்:
ெஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் தொழிலுக்கு பயன்டுத்தப்பட்ட தனியார் விடுதி உரிமையாளர் உள்பட 12 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் 11 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கீழப்பழுவூரைச் சேர்ந்த ராஜேந்திரன்(66) என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். அதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.