உள்ளூர் செய்திகள்
file photo

போக்குவரத்துக்கு இடையூராக உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-05-12 09:34 GMT   |   Update On 2022-05-12 09:34 GMT
போக்குவரத்துக்கு இடையூராக உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
புதுக்கோட்டை:


அறந்தாங்கி நகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றிற்கு சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லுகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 எந்நேரமும் பரபரப்பாக உள்ள அறந்தாங்கி நகர் பகுதியில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகக் கானப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையின் இருபுறத்திலும் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்போடு அகற்றும் பணிகள் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வட்டாட்சியர் காமராஜ் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர், காவல்த்துறையினர் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News