உள்ளூர் செய்திகள்
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
திருமருகல் அருகே திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட 7 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் புறாகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுபிக்ஷாமற்றும் நிவேதா ஆகிய இரண்டு மாணவிகள் தேர்ச்சி பெற்று ள்ளனர்.
தேர்ச்சி பெற்ற இரண்டு மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஆண்டுதோறும் ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. கடந்த வருடம் நடைபெற்ற தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் நான்குபேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவ ர்களை ஊக்குவித்த தலைமை ஆசிரியரையும், ஆசிரியர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.