உள்ளூர் செய்திகள்
நாகை மாவட்டத்தில் மோட்டார் வாகன அலுவலர்கள் நடத்திய சோதனையில் 20 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்கான்களை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவின் பேரில் போக்கு வரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் குறிப்பாக தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்கான்) பயன்படுத்தபடுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் மோட்டார் வாகன அலுவலர்கள் திடீர் சோதனைஇரண்டு வார காலமாக மேற்கொள்ள ப்பட்டது.
இச்சோதனையில் 20 தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில் அதிகஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.