உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

அரக்கோணத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2022-05-11 09:27 GMT   |   Update On 2022-05-11 09:27 GMT
அரக்கோணத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெமிலி:

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரக்கோணம் முதல் திருவள்ளூர் ரெயில் நிலையம் வரை பயணி களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

அதன்படி நேற்று கடம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய ரெயில் நிலையங்களில் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வது, ரெயில்கள் மீது கற்களை வீசுவது, தண்டவாளத்தை கடந்து செல்வது, தண்டவாளம் முன்பு நின்று கொண்டு ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது.

மேலும், ரெயில்வேவுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களிலும் பொது மக்கள் ஈடுபடக்கூடாது, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News