உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை

Published On 2022-05-11 14:51 IST   |   Update On 2022-05-11 14:51:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை:

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பச் சலனம் வளிமண்டல மேலடுக்கு கீழடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. 

அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலினால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அவதிக்குள்ளாகி இருந்தனர். 

இந்நிலையில் அசாணி புயல் தீவிரமடைந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இதே போன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம்:-
அரக்கோணம் : 8.6
ஆற்காடு: 6.2
காவேரிப்பாக்கம்: 13
வாலாஜா: 17.1
அம்மூர்: 4.6
சோளிங்கர்: 17.2
கலவை: 6.2
மொத்தம்: 72.9
அவரேஜ்: 10.41

இதனால் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து சற்று இதமான சூழல் நிலவியதால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News