உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான கார்

கார் மரத்தில் மோதி ஐ.டி. என்ஜினீயர்கள் 5 பேர் படுகாயம்

Published On 2022-05-11 13:44 IST   |   Update On 2022-05-11 13:44:00 IST
கோட்டக்குப்பம் அடுத்த குப்பம் கலால் சோதனைச்சாவடி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி சென்னையை சேர்ந்த என்ஜினீயர்கள் படுகாயம் அடைந்தனர்.
சேதராப்பட்டு:

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் அந்தோணி (வயது 27). இவரது நண்பர் ஷேக் அப்துல் (வயது 28). இவரது மனைவி ராகுல்யா (வயது 27) மற்றும் சினேகா (வயது 21) சுப்புலட்சுமி (வயது 20). இவர்கள் 5 பேரும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் சென்னையிலிருந்து புதுவைக்கு நள்ளிரவில் காரில் சுற்றுலா வந்தனர். காரை அந்தோணி ஓட்டி வந்தார். கோட்டக்குப்பம் அடுத்த குப்பம் கலால் சோதனைச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் வேகமாக மோதியது. இதில் கார் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த காரை ஓட்டி வந்த அந்தோணி, ஷேக் அப்துல், ராகுல்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். சினேகா, சுப்புலட்சுமி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

காயமடைந்த 5 பேரும் வலியால் துடித்தனர். அவர்களை அங்கிருந்த போலீசார் மீட்டு கனக செட்டிக்குளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News