உள்ளூர் செய்திகள்
ரேணுகாதேவி.

குடும்ப தகராறில் இளம்பெண் தீ குளித்து தற்கொலை

Published On 2022-05-11 08:12 GMT   |   Update On 2022-05-11 08:12 GMT
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் மண்எண்ணை ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.
கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்ட ன்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். பனி யன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 

இவரது மனைவி ரேணுகாதேவி (வயது 32). திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ரேணுகாதேவி மண் எண்ணை ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.
 
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ரேணுகாதேவி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News