உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

அரசு-தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பறிமுதல்

Published On 2022-05-11 07:58 GMT   |   Update On 2022-05-11 07:58 GMT
பவானி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் ஒலி எழுப்பும் பைப் ஹாரன் பயன்படுத்திய 40-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்த பைப் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 பவானி:

பவானி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் ஒலி எழுப்பும் பைப் ஹாரன் பயன்படுத்திய 40-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்த பைப் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பவானி பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் பைப் ஹாரன்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பவானி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான அலுவலர்கள் அரசு மற்றும் தனியார்  பேருந்துகளில் உள்ள ஹாரன்களை சோதனை செய்து டி.சி.எம்.எல். அளவு அதிகமாக உள்ள பைப் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் ஏற்படும் இடையூறு குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்களும் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Tags:    

Similar News