உள்ளூர் செய்திகள்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் விவசாயிகள் பயன்பெறும் வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அந்தியூர்:
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம்பர்கூர் வேம்பத்தி, மைக்கேல் பாளையம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் விவசாயிகள் பயன்பெறும் வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மைக்கேல் பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில்வேளாண்மை உளவுத்துறை, கால்நடைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை துறை,வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாய கடன் அட்டை, சொட்டு நீர் பாசனம், பட்டா மாறுதல், மின் இணைப்பு, பெயர் மாற்றம் விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்குதல் உள்பட விவசாயிகளின் திட்டங்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில்கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மேலாளர் கந்தசாமி, மைக்கேல் பாளையம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.