உள்ளூர் செய்திகள்
மழையால் ஏற்படும் மின்சார பாதிப்பு தெரிவிக்க அவசர உதவி எண் வெளியீடு
மழையால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில் அவசர உதவி எண் தெரிவிக்கப்படுகிறது.
ஈரோடு:
மழையால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில் அவசர உதவி எண் தெரிவிக்கப்படுகிறது.
ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை, காற்றுடன் பெய்து வருகிறது.
இதனால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில் அவசர உதவி எண் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி காற்று, மழையால் மின் கம்பம் சாய்தல், மின் கம்பிகள் அறுந்து விழுதல், பிற காரணங்களுக்காக மின்வாரியத்தை ‘மின்னகம்’ எனப்படும் – 94987 94987, வாட்ஸ் ஆப் எண் – 94458 51912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
வாட்ஸ் ஆப் எண்ணில் புகார்களை படத்துடன் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.