உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்த காட்சி

மனுக்கள் மீது உடனடி நடிவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

Published On 2022-05-10 15:18 IST   |   Update On 2022-05-10 15:18:00 IST
ராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனுக்கள் மீது உடனடி நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை, பட்டா, குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பொதுநலன் குறித்த மனுக்கள் என 265 மனுக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடம் இருந்து பெற்று கொண்டார்.

சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டர். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், உதவி கலெக்டர்கள் சேகர், இளவரசி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News