உள்ளூர் செய்திகள்
அன்னையர் தின விழாவில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. பங்கேற்ற காட்சி.

அன்னையர் தின விழா

Published On 2022-05-10 14:52 IST   |   Update On 2022-05-10 14:52:00 IST
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் கிராமத்தில் அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் எஸ்.ஓ.எஸ். தன்னார்வு அமைப்பு சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தனித்தனி குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்த இல்லத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் அன்னையர்களுக்கு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். அன்னையர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் மற்றும் அன்னையர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கிராமத்தின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ்  கலந்து கொண்டார். முதுநிலை பணியாளர் சுஜாதா நன்றி கூறினார்.

Similar News