உள்ளூர் செய்திகள்
கொள்ளை முயற்சி நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

அரசு பஸ் டிரைவர் வீட்டில் கொள்ளை முயற்சி

Published On 2022-05-10 07:34 GMT   |   Update On 2022-05-10 07:34 GMT
கோபிசெட்டிபாளையத்தில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி செட்டிபாளையம் சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (29). இவர் அரசு போக்குவரத்து கழகம் கோபிசெட்டிபாளையம் கிளையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று  அங்கு இருந்த பூரோவையும் உடைத்து பார்த்துள்ளனர்.

அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். பணிமுடிந்ததும் வீடு திரும்பிய நந்தகுமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து நந்தகுமார் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  கொள்ளை நடந்த இடத்துக்கு துப்பறியும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 

மேலும் கொள்ளை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News