உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆற்காடு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு

Published On 2022-05-09 15:12 IST   |   Update On 2022-05-09 15:12:00 IST
ஆற்காடு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ராணிபேட்டை:

ஆற்காட்டை அடுத்த கீழ்வி ஷாரம் மார்க்க பந்து நகர் பகுதியைச் சேர்ந்த பழனி. இவரது மகன் பிரசாந்த் (வயது 19).

இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். 

அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே பிரசாந்த் அணிந்திருந்த துணிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் சந்தேகம் அடைந்த பழனி ஆற்காடு தீயணைப்பு துறை மற்றும் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடி பிரசாந்தை பிணமாக மீட்டனர்.

 மேலும் இது குறித்து ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News