உள்ளூர் செய்திகள்
மாயமான சேகர்.

2 மகன்களுடன் தந்தை மாயம்

Published On 2022-05-09 09:32 GMT   |   Update On 2022-05-09 09:32 GMT
அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் 2 மகன்களுடன் தந்தை மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் 2 மகன்களுடன் தந்தை மாயமான சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள உமாரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (33) ,‌ கூலித் தொழிலாளி இவரது மனைவி சரண்யா.  

சேகருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இவரது மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் சேகர் கடந்த 5-ந் தேதி தனது மனைவி சரண்யாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதில் கோபமடைந்த சேகர் தனது மனைவி சரண்யா பக்கத்து வீட்டுக்கு சென்ற பிறகு தனது மகன்களான பிரம்மதீஷ் (8), முகுந்தன் (6) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார், 

பின்னர் சரண்யா வீட்டில் வந்து பார்த்தபோது தனது கணவர் குழந்தைகளை காணாமல் தேட ஆரம்பித்தார். 

அப்போது வீட்டில் இருந்த ரூ 15 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.  

தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மற்றும் மகன்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தன் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News