உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

அந்தியூரில் 2-வது நாளாக மின்தடை

Published On 2022-05-09 09:22 GMT   |   Update On 2022-05-09 09:22 GMT
அந்தியூர் பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்:

அந்தியூர் பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

 அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் மழை ெபய்து வருகிறது.

 இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி முதல் சூறாவளி காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சூறாவளி காற்று அடித்ததில் அந்தியூர், தவிட்டுப்பாளையம், கரட்டுப்பாளையம், தங்கப்பாலையம், அந்தியூர் காலனி, வேதகாரன் குட்டை, மலை கருப்புச்சாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

 இதில் வேதகாரன் குட்டை பகுதியில் மின் கம்பம்உடைந்து கீழே சாய்ந்தது. இதனால் அந்தியூர் காலனி, ஈச்சப்பாரை, வேதகாரன் குட்டை, மலை கருப்புசாமி கோவில் பகுதியில் மின் வினியோகம் இரவு முழுவதும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து தவிட்டுபாளையம் மின் துறை பணியாளர்கள்துரிதமாக செயல்பட்டு அந்தியூர், தவிட்டுபாளையம், கரட்டுப்பாளையம், தங்கபாளையம் பகுதியில் 2 மணி நேரத்தில் மின்தடையை சரி செய்தனர்.
Tags:    

Similar News