உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பிரியா. இந்நிலையில் ராமச்சந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
ராமச்சந்திரன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த விவகாரம் மற்றவர்களுக்கும் தெரிய வந்தது. இதனால் ராமச்சந்திரனுடன் பழகிய பெண் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் ராமச்சந்திரன் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ராமச்சந்திரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமச்சந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.