உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் பள்ளத்தில் விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு
கழிவுநீர் பள்ளத்துக்குள் விழுந்த முதியவரை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
பவானி:
பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பவானி ஆற்றின் அருகே கழிவுநீர் பள்ளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் விழுந்து கிடப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீரில் விழுந்து கிடந்த முதியவரை உயிருடன் மீட்டனர்.
பின்னர் பவானி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.