உள்ளூர் செய்திகள்
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் தவுபிக் (21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று தனது மாமா மற்றும் அத்தையுடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
அப்போது கொடிவேரி ஆற்று பாலத்திற்கு கீழ் இறங்கி குளிக்க சென்ற தவுபிக் ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாமல் தத்தளித்த நீரில் மூழ்கியுள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் தவுபிக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தவுபிக் இறந்து விட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.