உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-05-08 10:36 GMT   |   Update On 2022-05-08 10:36 GMT
சிவகாசி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்

சிவகாசி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் இசக்கி நாராயணன் (வயது25). இவர் கார் வாட்டர் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த சிலர் உனக்குப் பெண் கிடைக்காது என்று கூறி உள்ளனர். இதனால் மனமுடைந்த இசக்கி நாராயணன் மது குடித்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி ராமர் கொடுத்த புகாரின்பேரில் மாரநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News