உள்ளூர் செய்திகள்
மாயம்

திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்-2 குழந்தைகள் மாயம்

Published On 2022-05-08 10:30 GMT   |   Update On 2022-05-08 10:30 GMT
காரியாபட்டி அருகே திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்-2 குழந்தைகள் மாயமானார்கள்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சின்ன காரியாபட்டியை  சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அருகில் நடந்த கோவில் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை திருவிழா பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

இரவு வீடு திரும்பிய கணேசன் மனைவி மற்றும் குழந்தைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்தார்.  அவர்களை தேடி பார்த்தபோது எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை.

இதுபற்றி அவர் காரியா பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான  3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News