உள்ளூர் செய்திகள்
3,194 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கிய
ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 4-வது அலையை கட்டுப்படுத்த அரசின் உத்தரவின் பேரில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்டத்தில் 3,194 மையங்களில் இன்று காலை 7 மணிக்கு மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது. இந்த முகமானது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் பஸ், ரெயில் நிலையம் என 3,194 மையங்களில் நடைபெற்று வருகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் 4,260 பணியாளர்களும், 66 அரசு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகாமில் காலை முதலே 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், 15 வயது முதல் 18வயதுக்கு உட்பட்டவர்கள், 18வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர்.
கோவிஷீல்டு, கோவாக்சின், கோர்பி–வேக்ஸ் தடுப்பூசி பயன்ப–டுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இன்று நடக்கும் முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயி–க்கப்பட்டுள்ளதாக சுகாதா–ரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 60 வயதை கடந்தவர்கள் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த மெகா தடுப்பூசி முகாம்களில் இன்று தான் அதிக அளவு மையங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.