உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பவானி ஆற்றில் ஆண் பிணம்

Published On 2022-05-07 15:22 IST   |   Update On 2022-05-07 15:22:00 IST
பவானிசாகர் அருகே பவானி ஆற்றில் ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

பவானிசாகர் அருகே பவானி ஆற்றில் ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானிசாகர் அடுத்த படுகுதுறை பவானி ஆற்றின் நீரேற்று நிலையம் அருகே இக்கரைதத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் கிராம உதவியாளர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்து கொண்டு இருந்தனர். 

அப்போது பவானி ஆற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 இதில் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News