உள்ளூர் செய்திகள்
பவானிசாகரில் 8 மாத கர்ப்பிணி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பவானிசாகரில் 8 மாத கர்ப்பிணி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானிசாகர் சி.ஆர். முகாம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி யோகபிரியா என்ற நித்யா (26). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது நித்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நித்யா கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் புஷ்பராணி வீட்டுக்கு சென்று அங்கு தங்கி இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வந்த நித்யா திடீரென மாயமாகி விட்டார். வெளியில் சென்று இருந்த புஷ்பராணி வீட்டுக்கு வந்த பார்த்த போது அங்கு நித்யா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்த போது அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து புஷ்பராணி பவானிசாகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.