உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கொலை மிரட்டல் விடுத்த மனைவி மீது நடவடிக்கை கோரி மனு

Published On 2022-05-05 10:10 GMT   |   Update On 2022-05-05 10:10 GMT
கொலை மிரட்டல் விடுத்த மனைவி மீது நடவடிக்கை கோரி போலீஸ் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கோபி(வயது32). இவர் பெரம்பலூர் எஸ்பி மணியிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது,

எனக்கும் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த பூமாலை மகள் சின்னம்மாள் என்பவருக்கும் கடந்த 2013 ஆண்டு செப்.2ம்தேதி திருமணம் நடந்தது. எங்களுக்கு சித்தார்த் என்ற மகனும், ரித்லிகா என்ற மகளும் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் சிங்கப்பூர் சென்று வேலை செய்து வந்தேன்.

நான் வெளிநாட்டில் வேலை செய்ததால் எனது மனைவி பிள்ளைகளுடன் அவரத தாயார் பாப்பாத்தி வீட்டில் சென்று வசித்து வந்தார். என்னுடன் எனது மனைவியின் அண்ணனும், மைத்துனருமான சின்னதுரையும் வேலை செய்து வந்தார். நான் சம்பாதித்த பணத்தை சிறுசிறுக என ரூ. 8 லட்சம் பணத்தை மைத்துனர் சின்னதுரையிடம் கொடுத்து வைத்திருந்தேன். மேலும் எனது மனைவிக்கு 8 பவுனில் தாலி கொடி செய்து போட்டுள்ளேன்.

கடந்த 2020ம் ஆண்டு நான் சிங்கப்பூரிலிருந்து திரும்பி எனது சொந்த ஊருக்கு வந்து பின்னர் எனது மனைவி வீட்டிற்கு சென்று என்னுடன் குடும்பம் நடத்த வா என அழைத்தபோது உன்னை எனக்கு பிடிக்கவில்லை, உன்னுடன் குடும்பம் நடத்த வர முடியாது என சின்னம்மாள் கூறிவிட்டார்.

இதனால் நான் வேறு வழியில்லாமல் பெரம்பலூர் குடும்ப நல கோர்ட்டில் விவகாரத்து வழக்கு தொடர்ந்தேன், குடும்ப நல கோர்ட்டில் எங்களது திருமண உறவை முறித்து விவகாரத்து வழங்கப்பட்டது. அப்போது நான் எனது மனைவிக்கு போட்ட 8 பவுன் தாலிக்கொடி மற்றும் மைத்துனரிடம் கொடுத்த ரூ 8 லட்சம் பணத்தை திருப்பி கொடுப்பதாக சம்மதம் தெரிவித்து கோர்ட்டில் எழுதி சின்னமாள் கொடுத்தார்.

அதன்படி கடந்த மாதம் 14ம்தேதி எனது உறவினர்களுடன் எனது மனைவி சின்னமாள் வீட்டிற்கு சென்று கோர்ட்டில் எழுதி கொடுத்தப்படி 8 பவுன் தாலிக்கொடி மற்றும் ரூ. 8 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு நகை மற்றும் பணத்தை திருப்பி தரமுடியாது என கூறி தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

எனவே கோர்ட்டில் உத்தரவை மீறுவதோடு, கொலை மிரட்டல் விடுத்த எனது மனைவி சின்னம்மாள் மற்றும் மைத்துனர் சின்னதுரை மீது நடவடிக்கை எடுத்து எனது நகை மற்றும் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட எஸ்பி மணி அரும்பாவூர் போலீசாருக்கு மனுவினை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News