உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்

5 ஆண்டு பா.ம.க. ஆட்சியிலிருந்தால் தமிழகம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லப்படும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2022-05-03 10:33 GMT   |   Update On 2022-05-03 10:33 GMT
தமிழ்நாட்டில் 55 ஆண்டுகாலம் 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காசாம்பு பூமாலை, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ம.க. மாநில தலைவர் மணி கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து மாநில இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, பா.ம.க. தொடங்கி 32 காலம் முடிந்து 33வது ஆண்டு தொடங்குகிறது. பா.ம.க. வில் உள்ளது போல் வேறு எந்த கட்சியிலும் இளைஞர்கள் இல்லை. நம்மிடம் தொலைநோக்கு திட்டம், திறமை உள்ளது.

கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கான நேரம் வந்து விட்டது. எனவே இளைஞர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அன்புமணி ராமதாஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் 55 ஆண்டுகாலம் 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை. பா.ம.க. விடம் 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பா.ம.க.வினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி செய்யும் என கூறினார்.

 இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News