உள்ளூர் செய்திகள்
அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் 3-வது நாளாக மின்விநியோகம் இல்லை
சூறாவளி காற்றில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் 3-வது நாளாக மின்விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அம்மாபேட்டை:
சூறாவளி காற்றில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் 3-வது நாளாக மின்விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதிகளான கேசரிமங்கலம், குப்பிச்சிபாளையம், மேலூர், சே கண்டியூர், கல்பாவி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளை மின்சார வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் பணிகள் முழுமையாக நடைபெறாததால் 3-வது நாளாக 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண்கள், குழந்தைகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் செல்போன் வெளி ச்சத்திலும், மெழுகுவத்தி வெளிச்சத்திலும், அகல் விளக்கு வெளிச்சத்திலும் பெண்கள் வீட்டு வேலைகள் உள்ளிட்ட பணிகளை சிரமத்துடன் செய்து வருகின்றனர்.