உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இளம் பெண் குழந்தையுடன் மாயம்

Published On 2022-05-03 15:09 IST   |   Update On 2022-05-03 15:09:00 IST
தாளவாடி அருகே இளம் பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

தாளவாடி அருகே இளம் பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாளவாடி அடுத்துள்ள மெட்டல்வாடி, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகள் ஜலசாக்ஷி(28). இவருக்கும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், அமிச்சவாடி என்ற பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. 

இவர்களுக்கு கிருத்தி(6) என்ற மகள் உள்ளார். கடந்த ஓராண்டாக கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் ஜலசாக்ஷி வந்துவிட்டார்.

 இந்நிலையில் கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்த ஜலசாக்ஷி மற்றும் குழந்தை கிருத்தி ஆகியோர் திடீரென்று மாயமாகினர். பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் தந்தை பத்மநாதன் தாளவாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News