உள்ளூர் செய்திகள்
கிராம சபா கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

காரியந்தல் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்

Published On 2022-05-02 15:15 IST   |   Update On 2022-05-02 15:15:00 IST
காரியந்தல் ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார்.
திருவண்ணாமலை:

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரியந்நல் ஊராட்சியில் நேற்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் டீ. கே. லட்சுமி நரசிம்மன், ஒன்றியக்குழு தலைவர் தமிழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிரா மத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து பேசினார் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் மோகன் வரவேற்றார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News