உள்ளூர் செய்திகள்
விசாரணைக் கைதி மரணம்- வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
தங்கமணியை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த இளையாங்கண்ணி தட்டறையை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது48). கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு, திருவண்ணாமலை சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட இவர் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
விசாரணைக் கைதி தங்கமணி மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.