உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு உணவு உபசரிப்பு நடந்தது.

வைத்தீஸ்வரன்கோயிலில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு உபசரிப்பு நடந்தது.

Published On 2022-04-30 15:24 IST   |   Update On 2022-04-30 15:24:00 IST
தூய்மை பணியாளர்களுக்கு உணவு உபசரிப்பு
சீர்காழி:

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோவில் உள்ளது. 

இக்கோவிலில் சித்திரை இரண்டாவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர். 

நான்கு வீதிகள், பிரதான சாலைகளில் அதிக அளவு நெகிழிப் பைகள் உள்ளிட்ட அதிக குப்பைகள் குவிந்திருந்தது. 

மலைபோல் குவிந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் ஒரே நாளில் சுத்தம் செய்து நான்கு வீதிகளிலும் பிளிசிங் பவுடர் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.


இந்நிலையில் சிறப்பாக தூய்மை பணி மேற்கொண்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், அலுவலர்களை கவுரவிக்கும் வகையில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அவரது கணவர் அலெக்சாண்டர் ஆகியோர் தங்களது இல்லத்திற்கு அழைத்து கறி உணவு சமைத்து விருந்து வைத்தனர்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

Food treat, வைத்தீஸ்வரன்கோயில்

Similar News