உள்ளூர் செய்திகள்
கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே காய்கறி கடையில் மர்மநபர் கைவரிசை

Published On 2022-04-28 16:05 IST   |   Update On 2022-04-28 16:05:00 IST
உளுந்தூர்பேட்டை அருகே காய்கறி கடையின் கேட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டையில் திருநாவலூர் செல்லும் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இந்த காம்ப்ளக்ஸ் கடையில் உள்ள ஒரு கடையை அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர் கடையின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார். இன்று வழக்கம் போல் கடைக்கு வந்தார். அப்போது கடையின் பெயர் உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூபாய் 10,000 பணத்தை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதை அறிந்தார்.

இதுகுறித்து ராஜா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து பார்த்தபோது சிறுவன் ஒருவன் பள்ளி சீருடையில் கடைக்கு நள்ளிரவில் வந்து கடையின் கேட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதை அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவன் யார் எந்த ஊரை சேர்ந்தவன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News