உள்ளூர் செய்திகள்
கடனை திருப்பி கேட்டதால் பெண்ணுக்கு கொலை மிரட்டல்- தந்தை மகன்கள் மீது போலீஸார் வழக்கு
சங்கராபுரம் அருகே கடனை திருப்பி கேட்டதால் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்தவர் சிகாமணி. இவர், கள்ளக்குறிச்சி அடுத்த குரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் தனது மகள் திருமணத்திற்கு 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் முருகேசன் இறந்ததால், அவரது மகள் இந்திரா, தனது தந்தை கொடுத்த பணத்தை தரும்படி சிகாமணியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். கடந்த 25மந் தேதி சங்கராபுரம் வந்து சிகாமணியிடம் பணத்தை கேட்ட இந்திராவை சிகாமணி, அவரது மகன்கள் பாலமுருகன், தாமோதரன் ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திரா அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார், சிகாமணி (60), பாலமுருகன் (35), தாமோதரன் (32) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.