உள்ளூர் செய்திகள்
மினி லாரியில் இருந்து புகை வெளியேறிய காட்சி.

பெயிண்ட் ஏற்றி வந்த மினி லாரியில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு

Published On 2022-04-28 15:15 IST   |   Update On 2022-04-28 15:15:00 IST
திம்பம் மலைப்பாதையில் பெயிண்ட் ஏற்றி வந்த மினி லாரியில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.
சத்தியமங்கலம்: 

திம்பம் மலைப்பாதையில் பெயிண்ட் ஏற்றி வந்த மினி லாரியில் இருந்து 
புகை வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.


குஜராத் மாநிலம் ஜக்காடியா என்ற பகுதியில் இருந்து  கோவைக்கு பெயிண்ட் ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி திம்பம் மலைப்பாதை வழியாகஇரவு வந்து கொண்டு இருந்தது.  

அந்த மினி லாரி பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் வந்த போது மினி லாரியின் பின்பக்க டயர் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைபார்த்த சோதனை சாவடியில்இருந்த போலீசார் லாரியை ஒதுக்குப்புறமாக நிறுத்தி தண்ணீர் ஊற்றினர். 

மேலும் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து புகை  மூட்டத்துடன் தீப்பிடித்து எரியும் நிலையில் இருந்த மினி லாரி மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

 திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி பீரேக் பயன்ப டுத்தியதால் பிரேக் ட்ரம் சூடாகி மினி லாரியில் புகை வந்தது தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News