உள்ளூர் செய்திகள்
கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது
கடத்தூர் அருகே கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
கடத்தூர் அருகே கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டுப்புதூர்-கக்ரா குட்டை சாலையில் கடத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபரிவாசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
லாரியில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் , அரவிந்த், இளையராஜா ஆகியோர் என தெரிய வந்தது.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.