உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பங்களாபுதூர் போலீசார் வேட்டுவன்புதூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி வந்த வீட்டின் உரிமையாளரான ஏளூர் வேட்டுவன்புதூரை சேர்ந்த குமாரசாமி (62), கொடிவேரி நடுப்பாளையத்தை சேர்ந்த செந்தில் (38), ரஞ்சித்குமார் (28), முருகேசன் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டினையும், ரூ.30ஆயிரத்து 150 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.