உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருகே 7-ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்: சிறுவன் கைது
திருவண்ணாமலை அருகே 7-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாலிபரையும் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவரது தாய் மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
வேட்டவலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வரும் மார்பின் சீரி (வயது25) என்பவர் பாட்டி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவருடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் 17 வயது சிறுவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். வாலிபரும் சிறுவனும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் காப்பக மையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மாணவியை மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக குழந்தைகள் காப்பக நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்தனர். தப்பி ஓடிய மார்பின் சீரியை தேடிவருகின்றனர். இச்சம்பவம் வேட்டவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவரது தாய் மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
வேட்டவலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வரும் மார்பின் சீரி (வயது25) என்பவர் பாட்டி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவருடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் 17 வயது சிறுவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். வாலிபரும் சிறுவனும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் காப்பக மையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மாணவியை மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக குழந்தைகள் காப்பக நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்தனர். தப்பி ஓடிய மார்பின் சீரியை தேடிவருகின்றனர். இச்சம்பவம் வேட்டவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.