உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் பிணம்

Published On 2022-04-26 15:02 IST   |   Update On 2022-04-26 15:02:00 IST
கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் பிணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் பிணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் கீழ் பவானி கிளை வாய்க்காலில் ஒரு ஆண் பிணம் மிதந்து வந்தது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீஸ் நிலை யத்துக்கு தகவவல் கொடுத் தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இறந்த வரின் குறித்த புகைப்படம் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலை தளங்களில் பரவியது.  இந்த புகைப்படத்தை செல்போனில் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி அடுத்த நாகதேவன்பாளை யம் பகுதியை சேர்ந்த என்பவர் இறந்தது தனது தந்தை பழனிசாமி என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவரது உற வினர்களின் செல்போனி லும் தகவல் வந்தது. 
இதையடுத்து கோபி போலீஸ் நிலையத்துக்கு சென்ற வெங்கடாசலம் இறந்தது தனது தந்தை என தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை யில் அவர் கோபி அடுத்த நாகதேவன் பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (55). எலக்ரீசியன் என்றும்,  நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வாய்க்காலில் தவறி விழுந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News