உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா முதல் தவணை தடுப்பூசி 1.75 லட்சம் பேர் செலுத்தி கொள்ளவில்லை

Published On 2022-04-26 14:57 IST   |   Update On 2022-04-26 14:57:00 IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை இன்னும் 1.75 லட்சம் பேர் செலுத்தவில்லை என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை இன்னும்  1.75 லட்சம் பேர் செலுத்தவில்லை என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா  தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கோவேக்சீன், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள்  போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன் களப்பணி யாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

கோவேக்சீன்  தடுப்பூசி முதல் தவணை செலுத்தி யவர்கள் 28 நாட்கள் கழித்து  2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி  கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.  இதேப்போல் கோவிஷீல்டு   முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள்  84 நாட்கள் கழித்து  2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப் பட்டனர்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொது மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் சார்பில்  வாரவாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 34 ஆயிரத்து 340 பேர்  செலுத்தி கொண்டு உள்ளனர். இது 90.32 சதவீதம் ஆகும்.  2&ம் தவணை தடுப்பூசியை மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 11 ஆயிரத்து 320 பேர்  தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது 72 சதவீதம் ஆகும்.

மாவட்டத்தில் இதுவரை  முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 75 ஆயிரத்து 59 பேர்  செலுத்தி கொள்ள வில்லை என்றும், 2-ம் தவணை தடுப்பூசியை  3 லட்சத்து 39 ஆயிரத்து 903 செலுத்திக் கொள்ளவில்லை என்றும் சுகாதாரத்துறை யினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளா தவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்,  அல்லது அரசு மருத்துவமனையில் சென்று செலுத்திக் கொள்ளலாம்  எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News